முகப்பு Uncategorized அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் அலங்கார பூச்சொரிதல் விழா.

அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் அலங்கார பூச்சொரிதல் விழா.

4
0

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா. 48- பூத்தட்டுகள் கலந்து கொள்கின்றன-
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு விடுதல் நிகழ்ச்சியில் பல்லாயிர கணக்கான பொதுமக்கள் கூடி வழிபடுவது வழக்கம்.

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 48- இடங்களிலிருந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து, ஜவகர் பஜார் ,மார்க்கெட், மாரியம்மன் ஆலயம் வரையிலும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் சமூக விரோதிகள் ஊடுருவாமல் கண்காணிக்கவும் பாதுகாப்பு பணியில் இரண்டு ஏடிஎஸ்பி, 5-டிஎஸ்பி, ஒன்பது காவல் ஆய்வாளர்கள், 30- துணை ஆய்வாளர்கள் தலைமையில், ஊர்க்காவல் படை மற்றும் ஆயுதப் படைப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்