தொழிலாளர் தினம் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். 8 மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாள். அப்படிப்பட்ட மே தினம் 1923 ஆம் ஆண்டு இந்தியாவில், தமிழகத்தில் சென்னையில் தான் முதன்முறையாக கொண்டாடப்பட்டது.
முதலில், மே தினம் உருவான கதையை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டு கொண்டிருந்த சமயம் அது இதை எதிர்த்து அவ்வப்போது வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கும் குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் இதில் பிரபலமானது.

அதே போல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் தான் முதன் முதலாக எட்டு மணி நேர வேலை என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவே தொழிலாளர் போராட்டங்களின் மயில் கற்களாகும்.