என் மகளின் பெயரை வேறு யாரும் வைக்க கூடாது – வடகொரியா அதிபர் கிம் ஜாங். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாரும் பயன்படுத்த கூடாது என வினோத தடை விதித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதன் முறையாக தனது மகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தினார். தற்போது தன் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர் வடகொரியா மக்கள்.