தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதைதொடர்ந்து, ஆலய வாசலில் சிறப்பு ரத வாகனத்தில் ஏயர்கோன் கலிகாம நாயனாருக்கு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னர், திருவீதி உலா மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் திருவீதி உலா ஆலய கிழக்கு வாசல் ,வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தது.

அருள்மிகு, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா , நமச்சிவாயா கோசத்துடன் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின், ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.