கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள அழகன் ஸ்ரீ பாலமுருகனுக்கு தை மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் வழங்கிய உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பின் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதிய சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.