கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டுச்சக்கரை தயாரிக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூபாய்.1,100க்கும், அச்சு வெல்லம் ரூபாய் 1,080க்கும் விற்பனையாகிறது. தற்போது 80 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூபாய் 1,280 க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூபாய் 1200க்கும் விற்பனையாகிறது. கரும்பு ஒரு டன் ரூபாய் 2300 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.