கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது

கரூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்,

இன்று ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பஞ்சாமிர்தம்,பால், தயிர், இளநீர், மஞ்சள்,திருநீர்,சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து கற்பூர ஆரத்தி,நட்சத்திர ஆரத்தி,மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.