தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர் ,பஞ்சாமிர்தம், தேன், நெய் ,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் ,விபூதி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து நந்திபகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்தனர். பின்னர் சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டி அதை தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.

பின்னர் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாத வழங்கப்பட்டது. பின்னர் மேல தாளங்கள் முழங்க ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி அளித்தார். ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் சுவாமி ஆலயம் குடி புகுந்தார்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷ விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பிரதோஷ விழாவை காண கரூர் மட்டும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.