முகப்பு Uncategorized கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் இரண்டாவது நாளாக வருமானவரி துறையினர் சோதனை.

கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் இரண்டாவது நாளாக வருமானவரி துறையினர் சோதனை.

2
0

கரூரில் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருமானவரி துறையினர் சோதனை.

கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக வருமானவரித்துறை சோதனை. கரூர் மாநகரில் பிரபல ஜவுளிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸ் கடையில் நேற்று காலை முதல் வருமான வரி சோதனையில் ஈடுபட தொடங்கினார்.

சோதனையானது கரூர் ஜவகர் பஜார் சிவா டெக்ஸ் ஜவுளி கடை, ஜவுளி வைக்கும் கிடங்கு, ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள வீடு, குளித்தலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை மற்றும் வீடு என ஐந்து இடங்களில் நேற்று தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. மீண்டும் இன்று இரண்டாவது நாளாகவும் கரூர் சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறும் சோதனையால் இவர்கள் வரியைப்பு செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. வருமான வரிதுறை சோதனையில் ஆவணங்கள் கைப்பற்ற படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்