கார்கில் வெற்றி நாள், இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் பயங்கரவாதிகள் 1999ல் ஊடுருவினர். அந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கார்கில் மீட்பு போர் நடந்தது.

மிக உயரமான மலைத்தொடரில், மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இப்போரில் 527 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் உட்பட 4000பேர் கொல்லப்பட்டனர்.

போரில் இந்தியா வெற்றி வாகை சூடியது. சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி, ஜூலை 26ல் போர் முடிவுக்கு வந்தது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26ல் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் பட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது.