விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 3368 பயன்பெற்று உள்ளார்கள் – இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இந்தியாவிற்கே முன்மாதிரியாக விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்தார்கள். அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள்.