உலகப் புகழ்பெற்ற, அருள்மிகு கரூர் மாரியம்மன் திருவிழா வருகின்ற வைகாசி மாதம் சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா கம்பம் போடும் நிகழ்வுடன் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளதால் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் சுவாமி பல்வேறு வாகனத்திலும் திருவீதி உலா காட்சி தருகிறார்.

இந்நிலையில், கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே, இந்நிகழ்வு நடைபெறவுள்ள 31.05.2023 புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த, உள்ளூர் விடுமுறை நாளான 31.05.2023 ஆனது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் (Under Negotiable Instrument Act 1881) அறிவிக்கப்படவில்லை, ஆதலால் இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக 03.06.2023 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.