மதுரை, மாநகர் வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த ஆனந்த்கிருஷ்ணன் மற்றும் மதுரை பெத்தானியாபுரம் மூலப்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (24) ஆகிய இருவரும் பைக்கில் மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது பறக்கும் பாலத்தில் மேல் பைக்கில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது, அவுட்போஸ்ட் அருகே மேம்பாலத்தில் திரும்பும்போது வளைவில் பக்கவாட்டுசுவர் மீது மோதியது

இதில், வேகமாக பைக் மோதியதில் பைக்கை ஓட்டிவந்த ஆனந்தகிருஷ்ணன் சுவரில் மோதி உயிரழந்த நிலையில் மேம் பாலத்தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்து சீனிவாசன் தலை சிதறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபோன்று, நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் ஆடம்பர பைக்கில் பைக் ரேஸில் ஈடுபடுவதாலும் தொடர்ந்து, உயிரிழப்புகள் அதிகரித்துவருகிறது குறிப்பிடதக்கது.